கட்டழகின் எழில் கூட்ட
வளைவுகளின் மென்மையோக்கண்டீர்
நெளிவுகளில் உண்மையாக்கண்டீர்
புன்சிரிப்பும் புன்னகையும் பூட்டிவைக்கும் உண்மையோக்கண்டீர்
கன்னங்களின் செஞ்சிவப்பில் மறை நாணம் கண்டீர்
காண்பீர் இன்று நான் எனும் பெண் !!
கண்கள் வீசுவது காதல் கணையல்ல ,
சுடர் விடும் கம்பீரம்
நாகரீகத்தில் வளைபவள்ளல்ல,
பண்பின் நம்பிக்கயவள்
இவளை பாரதி சொன்னான் “புதுமைப்பெண்” என்று
என் கவியே! நீயும் அறிந்திலையோ
பெண் என்றும் புதுமை தான்

No comments:
Post a Comment