Monday, 29 September 2014

பிர­ச­வத்­திற்குப் பின்னர் பெண்­களில் ஏற்­படும் உள­வியல் மாற்­றங்கள்


பிர­ச­வத்­திற்குப் பின்னர் பெண்­களில் ஏற்­படும் உள­வியல் மாற்­றங்கள்

பெண்கள் தமது குழந்­தையைப் பிர­ச­வித்து தாய்­மைப்­பேற்றை அடைந்த பின்னர் வரும் பிர­ச­வத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­குதி ஒரு முக்­கிய விட­ய­மாகும். இக்­காலப் பகு­தியில் மேற் ­கொள்ள வேண்­டி­யதும் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­து­மான விட­யங்கள் பல பெண்­க­ளுக்கு உள்­ளன. ஆனால் நடை­மு­றையில் இவை யாவும், பெண்கள் மத்­தியில் புறக்­க­ணிக்­கப்­பட்ட விட­யங்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன. கர்ப்­ப­மா­கிய பெண்­ணொ­ருவர் தமது பிர­ச­வத்தை எவ்­வாறு மேற்­கொள்ள வேண்டும்? அதா­வது சிசே­ரியன் பிர­ச­வமா? அல்­லது சாதா­ரண சுகப் பிர­ச­வமா? எனப் பல ஏக்­கங்­க­ளுடன் இருப்­பார்கள். பிர­ச­வத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.



பிர­ச­வத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி யில் பெண்ணில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள் எவை?

பிர­சவம் முடி­வ­டைந்த பின்­வரும் ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் சரி­யான குடும்பக் கட்­டுப்­பாட்டு முறையை ஆரம்­பிக்க வேண்டும். இதன்­போது, ஏற்­படும் எதிர்­பா­ராத கருத்­தங்­கலை தடுக்க முடியும். பிர­ச­வத்தின் பின்னர் குடும்பக் கட்­டுப்­பாட்டு முறையின் அவ­சியம் தெரி­யாமல், பலர் எதிர்­பா­ராத வித­மான, திட்­ட­மி­டப்­ப­டாத கருத்­தங்­க­லுக்கு ஆளா­கின்­றனர். இதன்­போது சில மாதங்­களே வய­து­டைய ஒரு கைக்­கு­ழந்­தை­யுடன் மீண்டும் கருத்­த­ரித்தால் நடை­மு­றையில் ஒரு பெண் எந்­த­ளவு சிர­மங்­களை எதிர்­கொள்ள வேண்டும் என்­ப­தனை யாவரும் அறிந்­துள்­ளனர். இந்த வேளையில் பல தம்­ப­திகள் கூறு­வது தமக்கு இவ்­வாறு உட­ன­டி­யாக குடும்பக் கட்­டுப்­பாட்டு முறைகள் பாவிக்க வேண்டும் என்­ப­தனை எவரும் சரி­யாக எடுத்துக் கூற­வில்லை என்­பதே ஆகும். அத்­துடன் இவ்­வா­றான எதிர்­பா­ராத விதத்தில் கருத்­த­ரித்தால் அதனை எமது நாட்டில் சட்ட ரீதி­யாக கருக்­க­லைக்க முடி­யாது என்­பதால் நாம் பல­வித நடை­முறை சிக்­கல்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்டி வரு­கின்­றது. ஆகையால் இவற்றை வரு­முன்னே தடுப்­பது சிறந்­தது. பிர­சவம் முடி­வ­டைந்த பெண்­ணொ­ருவர் பாலூட்டும் தாயாக இருக்கும் போது, அவர் பாவிக்கக் கூடிய குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை­க­ளா­வன:

குடும்பக் கட்­டுப்­பாட்டு ஊசி, குடும்பக் கட்­டுப்­பாட்டு லூப் என அழைக்­கப்­படும் கர்ப்­பப்­பை­யினுள் போடப்­படும் சிறிய குச்சி மற்றும் கையில் தோலின் கீழ் போடப்­படும் சிறிய குச்சி போன்ற பல உள்­ளன. இவற்றால் பக்க விளை­வுகள் எது­வு­மில்லை. அல்­லது மிகவும் புறக்­க­ணிக்கக் கூடிய அளவே பக்க விளை­வுகள் காணப்­படும். ஆனால், இவற்றால் ஏற்­படும் நன்­மைகள் தான் அதிகம். ஆனால், பாலூட்டும் தாயொ­ருவர் குடும்பக் கட்­டுப்­பாட்டு மாத்­தி­ரை­களை பாவிப்­பது உகந்­த­தல்ல. ஏனெனில் அவற்றால் தாய்ப்­பாலின் அளவு குறைய வாய்ப்­புள்­ளது. ஆகையால் பிர­ச­வத்­திற்குப் பின்னர் ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் சரி­யான குடும்பக் கட்­டுப்­பாட்டு முறையை ஆரம்­பிப்­பது அவ­சியம்.

பிர­சவம் முடி­வ­டைந்த பின்னர் பெண்கள் எதிர்­கொள்ளும் முக்­கிய விடயம் தமது வயிறு பெரி­தா­கவே உள்­ளது என்­பதே ஆகும். அவர்­களைப் பார்த்துப் பலர் மீண்டும் கர்ப்­ப­மாகி உள்­ளீர்­களா? எனக் கேட்கும் அள­விற்கு வயிறு பெரி­தாக தள்­ளப்­பட்­டி­ருப்­பது எமது பெண்கள் மத்­தியில் உள்ள பிரச்­ச­ினைக்­கு­ரிய விட­ய­மாகும். இதற்குக் காரணம் பிர­சவம் முடி­வ­டைந்த பின்னர் அவர்கள் தமது வயிற்றுத் தசை­களை இறுக்­க­மாக்கும் சரி­யான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­ளா­மையே ஆகும். கர்ப்­ப­கா­லத்தில், குழந்­தையை வயிற்றில் தங்­கும்­போது அவர்­களின் வயிற்றின் தசைகள் இழு­பட்டுப் பல­வீ­ன­ம­டை­வது வழக்கம். இதனை நாம் பிர­ச­வத்­திற்குப் பின்னர் உடற்­ப­யிற்­சிகள் மூலம் இறுக்­க­ம­டையச் செய்ய வேண்டும். இதற்­காக நாம் உடற்­ப­யிற்­சி­களை சாதா­ரண பிர­ச­வ­மாயின் மறு­நாளே ஆரம்­பிக்­கலாம். ஆனால் சிசே­ரியன் பிர­சவம் ஆயின் ஒரு மாத காலப்­ப­கு­தியில் ஆரம்­பிக்­கலாம்.

இதற்கு பெண்கள் மேல்­நோக்கிப் பார்த்த வண்ணம் படுத்து, தமது கால்­களை முழங்­காலை மடிக்­காமல் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இதனை மாறி மாறி செய்து பின்னர் இரு கால்­க­ளையும் சேர்த்து முழங்­காலை மடிக்­காமல் உயர்த்திப் பின்னர் சிறிது நேரத்தில் கீழே விட வேண்டும். இவ்­வா­றாக நாளாந்தம் 10 – 15 நிமி­டங்கள் செய்­யும்­போது ஓரிரு மாதங்­களில் வயிறு இறுக்­க­ம­டைந்து பழைய நிலைக்குப் போய்­விடும்.

பிர­ச­வத்­திற்குப் பின்னர் ஏற்­படும் உள­வியல் மன­நிலை மாற்­றங்கள்:

பிர­ச­வத்­திற்குப் பின்னர் ஏற்­படும் மன உள­வியல் தாக்­கங்கள் ஒரு பொது­வான பிரச்­சினை. இது மிகவும் ஒரு எளிய ஆர ம்ப நிலையில் தோன்­றலாம். சிலரில் மிகத் தீவி­ர­மான மனநோய் போன்றும் ஏற்­ப­ட லாம். மிக எளிய ஆரம்ப நிலை போன்ற மன­நிலை மாற்­றங்கள் பிர­ச­வத்தின் பின் னர் 3ஆம் நாளில் தொடங்கி ஓரிரு நாட்­களில் சற்றுத் தீவி­ர­ம­டையும். இவர்கள் அடிக்­கடி அழுதல், நித்­திரை இல்­லாத தன்மை, சினத்தல், பயம் போன்ற தன்­மைகளை வெளிப்­ப­டுத்­து­வார்கள். இவை 50% வீத­மான பெண்­களில் பிர­ச­வத்தின் பின்னர் வெளிப்­படும். அதுவும் முதற் பிர­ச­வத்தின் பின்னர் வெளிப்­படும்.

இவற்றைக் கூட இருப்­ப­வர்கள் கண்­ட­றிந்து சரி­யான ஒத்­து­ழைப்­புடன் அணு­கும் ­போது சில நாட்­களில் இவற்­றி­லி­ருந்து விடு­பட முடியும். ஆனால், சிலரில் பிர­ச­ வத்­திற்குப் பின்னர் இரு வாரங்­களில் தீவிர மன­நிலை மாற்­றங்கள் சற்று மனநோய் போன்ற அளவில் வெளிப்­ப­டு­கின்­றது. இவர்கள் தூக்­க­மின்மை, சாப்­பிட முடி­யாமை, எளிதில் கோப­ம­டைதல், சரி­ யாகக் கிர­கிக்க முடி­யாமை போன்ற நிலை­களைக் கொண்­டி­ருப்­ப­துடன், தமது பிறந்த குழந்­தையை சரி­யான விதத்தில் பார்த்துப் பாது­காக்க முடி­யா­த­வர்­க­ளா­க வும் இருப்­பார்கள். சில­வே­ளை­களில் இவர் கள் தாம் தற்­கொலை செய்­து­கொள்­ளக்­கூ­டிய அள­வுக்கு மன­நி­லையில் மாற்­றங்­களைக் கொண்­டி­ருப்­பார்கள்.

இவை­யெல்லாம் பிர­ச­வத்­திற்குப் பின் னர் பெண்­களில் ஏற்­படும் ஹோர்மோன் மாற்­றங்­களால் அவர்­க­ளையே அறி­யா மல் ஏற்­ப­டு­கின்­றன. நாமும் அந்தப் பெண்­ ணிற்கு உத­வியும் ஒத்­தா­சையும் வழங்­காமல், பிறந்த குழந்­தையைக் கவ­னிப்­ப­தி­லேயே அக்­கறை செலுத்­தும்­போது, இந்­நிலை அப்­பெண்ணை மேலும் பாதிக்­கின்­றது.

ஆகையால் பிர­ச­வத்­திற்குப் பின்னர் குழந்­தையின் நட­வ­டிக்­கை­களில் அக்­க­ றையும் கவ­னமும் செலுத்­து­வது போல தாயான அந்தப் பெண்­ணி­னது மன­ நிலை, உள­வியல் மாற்­றங்கள், குறித்து கணவன்மார் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏதாவது அசாதாரண மனநிலை மாற் றங்களை பெண் பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படுத்தினால், அதனை ஆரம்பத்தி லேயே தகுந்த மருத்துவ ஆலோசனையை நாடி, அதன் மூலம் மன உளவியல் மருத்துவ நிபுணர் களின் உதவியைக் கூட சிலவேளைகளில் பெற்று இதற்குச் சரியான தீர்வும் பரிகாரமும் பெற முடியும்.

  thank to:
டாக்டர் கு.சுஜாகரன்
மகப்பேற்று பெண் நோயியல்
சத்திரசிகிச்சை நிபுணர்

No comments:

Post a Comment